Wednesday, November 11, 2015

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 09

தமிழ் வம்பன்: கும்பகோணம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 09: 'யாதும்' என்ற கோம்பை அன்வரின் அற்புத ஆவணப்படம் அருள் சத்தியநாதன் மாநாட்டின் முதல் நாள் திறைவடைவதற்கு முன்னர் அரங்கில் ஒரு ஆ...படம் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் ஓடியிருக்கும். படம் பார்த்துக் கொண்டிருந்தபோது நேரம் போனதே தெரியவில்லை. முடிந்தபோது, ஐயோ முடிந்து விட்டதே, இன்னும் கொஞ்சம் நீண்டியிருக்கலாமே என்ற ஆயாசமே என்னிலும் என் பக்கத்தில் அமர்ந்திருந்த இலங்கை நீர்வழங்கல் வடிகால் சபையைச் சேர்ந்த நீர்வளப் பொறியியலாளர் இஸ்மாயிலுக்கும் தோன்றியது. ஏனெனில் அது ஒரு அற்புதமான ஆவணப்படம். புதிய தகவல்களை எங்கள் உள்ளங்களில் அள்ளிக் கொட்டியது. ஒரு தகவல் களஞ்சியத்துக்குள் போய்வந்த உணர்வை அது எமக்கு அளித்தது. அன்றிரவு அந்த ஆவணப் படத்தைப் பார்க்காதவர்கள் கொடுத்து வைக்காதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

No comments: